Monday, 13 September 2021

தூய்மை நிகழ்வுகள் 2021 - பள்ளி பாராளுமன்றம் - 13-09-2021

 

 



அரசு உயர்நிலை பள்ளி கூவ. குரும்பபட்டி இன்று 13- 9- 2021 தூய்மை நிகழ்வின் மூலம் மாணவர்களிடையே பள்ளி பாராளுமன்றம் அமைத்து சுத்தம், மாணவர்களிடையே சமூக இடைவெளி, முகக் கவசம் அணிதல் போன்றவற்றை எடுத்துக் கூறி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது










தூய்மை நிகழ்வுகள் 2021 11-09-2021


 

 Covid-19 ~  SOP மற்றும் மறு சுழற்சி  பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை கணிதப் பட்டதாரி ஆசிரியர் தங்கராஜ் மற்றும் அறிவியல் பட்டதாரி ஆசிரியை இஸ்மாயீல் பீவி ஆகியோர் நடத்தினர்.சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர் திரு பால்ராஜ் அவர்கள் இந்நிகழ்ச்சிக்கு உதவி செய்தார்.











தூய்மை நிகழ்வுகள் 2021 09-09-2021,10-09-2021

 



தூய்மை நிகழ்வுகள் 20 21 அரசு உயர்நிலைப்பள்ளி குரும்பபட்டியில் இன்று (09-09-2021 மற்றும் 10-09-2021)தன் சுத்தம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமையாசிரியை திருமதி இரா அமுதா  அவர்கள் தலைமையேற்று நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.









தூய்மை நிகழ்வுகள் 2021 08-09-2021

 


இன்று 08-09-2021 அரசு உயர்நிலைப்பள்ளி குரும்பபட்டியில் .. கை கழுவுதல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பட்டதாரி ஆசிரியர் திரு செல்லப்பாண்டி அவர்கள் கை கழுவுவதின்அவசியம் மற்றும் முக்கியத்துவம் குறித்து மாணவர்களிடம் எடுத்துரைத்தார். 













தூய்மை நிகழ்வுகள் 2021 07-09-2021

 


அரசு உயர்நிலைப்பள்ளி கூவ குரும்பபட்டி தூய்மை நிகழ்வுகள் 2021...இல் இன்றைய 07-09-2021 நிகழ்ச்சிகள்.


" கொரானா தடுப்பு முறை" என்ற தலைப்பில் நாடக போட்டி நடத்தப்பட்டது.

 "கொரோனா விழிப்புணர்வு"க்கான பாட்டுப் போட்டி நடைபெற்றது.

"Covid-19 பெருந் தொற்று  பதில் அளிக்க கூடிய பள்ளி "என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி நடைபெற்றது இப்போட்டிகளை பட்டதாரி  ஆசிரியர்கள் திரு செல்லப்பாண்டி திரு தங்கராஜ் திரு பவுல்ராஜ் ஆகியோர் நடத்தினர்.


பங்கு பெற்ற மானவர்கள் 15


















தூய்மை நிகழ்வுகள் 2021 06-09-2021

 




இன்று 06-09-2021, அரசு உயர்நிலைப்பள்ளி குரும்பபட்டி யில்  தூய்மை சார்ந்து ஓவியப்போட்டி நடைபெற்றது.இப்போட்டியினை

அறிவியல் ஆசிரியை திருமதி இஸ்மாயில் பீவி அவர்கள் ஒருஙகினைத்து நடததினார்.





தூய்மை நிகழ்வுகள் 2021 04,05-09-2021

 




கூவ குரும்பபட்டி, அரசு உயர்நிலைப்பள்ளியில் தூய்மை நிகழ்வுகளின் நான்காம் (04-09-2021)மற்றும் ஐந்தாம் நாட்களுக்கான (05-09-2021)நெகிழி பயன்பாடு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ,தண்ணீர் சிக்கனம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல்,கொரோணா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல் பள்ளி ஆசிரியர்களின் மேற்பார்வையில் நடைபெற்றது.பட்டதாரி அறிவியல் ஆசிரியை திருமதி இஸ்மாயில் பீவி அவர்கள் தண்ணீர் சிக்கனம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஸ்லோகன் போட்டி மற்றும் ஓவியப் போட்டி நடத்தப்பட்டது.











தூய்மை நிகழ்வு 2021 03-09-2021

 தூய்மை நிகழ்வுகளில் இன்று (03-09-2021)அரசு உயர்நிலைப்பள்ளி கூவ.குரும்பபட்டி சார்பாக கிராம மக்களுக்கு கொரோணா தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்ட நிகழ்வு














தூய்மை நிகழ்வுகள் 2021 02-09-2021

 கூவ.குரும்பபட்டி அரசு உயர்நிலைப்பள்ளி பள்ளியில்   சுகாதார வாரத்தின் இரண்டாம் நாளான இன்று(02-09-2021) விழிப்புணர்வு ஏற்படுத்தும் முகமாக பள்ளியின் மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கிடையான விழிப்புணர்வு மற்றும் கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது