இன்று பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் -கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டது.
இன்று 15.07.2017 காமராசா் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. காமராசா் பற்றிய பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, கவிதைப்போட்டிகள் நடைபெற்றன.
முன்னதாக காமராசர் பற்றிய கட்டுரை போட்டி மற்றும் ஓவியப் போட்டிகள்
நடைபெற்றன.இதில் மாணவ மாணவியர் கலந்து கொண்டனா்.
பின்னா் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு தலைமைஆசிரியை திருமதி.ரா.அமுதா அவா்கள் தலைமையேற்றார். பட்டதாரி தமிழாசிரியா் திரு.அலெக்சாண்டா் விழா வரவேற்புரை ஆற்றினார்.
முதலில் காமராசர் பற்றிய பேச்சுப்போட்டி நடைபெற்றது. பேச்சுப் போட்டியில் பங்கு பெற்ற மாணவ மாணவியர் தமது பேச்சுதிறனைவெளிப்படுத்தி காமராசரின் தியாகங்களை நயம்பட விளக்கினர்.
பின்னா் காமராசர் பற்றிய கவிதை போட்டி நடைபெற்றது.இதில் மாணவ மாணவியர் கலந்து தமது கவிதை திறனை வெளிப்படுத்தினர்.
இப்போட்டிகளுக்கு நடுவர்களாக பட்டதாரி ஆசிரியர்கள் திரு.சூ. அருள்ராஜ், திரு.சு.செல்லப்பாண்டி,திருமதி.அ.ஜெசிந்தா அந்துவான் ராசாத்தி, திரு.சி.தங்கராஜ், திருமதி.சி.இஸ்மாயில் பீவி பொறுப்பினை ஏற்று மாணவ மாணவியரை தேர்ந்தெடுத்து பரிசுகளை வழங்கினர்.
இப்போட்டிகள் அனைத்தும் 6 முதல் 8 வகுப்புகள் வரையேயும் 9.10 வகுப்புகள் வரையேயும் இரு நிலைகளாக நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர் விபரம்:
கட்டுரைப் போட்டி :
9 - 10 வகுப்புகள் :
முதலிடம்: அ . நாகராஜன் ,10 ம் வகுப்பு
இரண்டாமிடம்: கோ.காளீஸ்வரி,10 ம் வகுப்பு
6 - 8 வகுப்புகள் :
முதலிடம்: கோ. லாவண்யா ,7 ம் வகுப்பு
இரண்டாமிடம்: அ.தாரணி ,7 ம் வகுப்பு
மூன்றாமிடம் : சு.ராமராஜ்,7 ம் வகுப்பு
பேச்சுப் போட்டி :
6- 8 வகுப்புகள் :
முதலிடம்: அ.தாரணி ,7 ம் வகுப்பு
இரண்டாமிடம்: தெ.சுந்தர் ,7 ம் வகுப்பு
மூன்றாமிடம் : கோ.அஜீத் ,8 ம் வகுப்பு
9- 10 வகுப்புகள் :
முதலிடம்: கா.பாலம்மாள் ,10 ம் வகுப்பு
இரண்டாமிடம்: அ.நாகராஜன்,10 ம் வகுப்பு
மூன்றாமிடம் : சா.சினேகா ஆனந்த ஜோதி,10 ம் வகுப்பு
கவிதைப்போட்டி :
9 - 10 வகுப்புகள் :
முதலிடம்: வி.வேலுமணி ,9 ம் வகுப்பு
6 - 8 வகுப்புகள் :
முதலிடம்: சிவசக்திவேல்,6 ம் வகுப்பு
இரண்டாமிடம்: சா.மீரா ஜாஸ்மின் ,7 ம் வகுப்பு
மூன்றாமிடம் : அ.காவ்யா ,7 ம் வகுப்பு
ஓவியப் போட்டி :
9 - 10 வகுப்புகள் :
முதலிடம்: சே.ஜெய சூர்யா ,9 ம் வகுப்பு
இரண்டாமிடம்: ம.ஈஸ்வரபாண்டி,10 ம் வகுப்பு
6 - 8 வகுப்புகள் :
முதலிடம்: சி.தினேஷ் ,8ம் வகுப்பு
இரண்டாமிடம்: மு.சசிக்குமார் ,8 ம் வகுப்பு
மூன்றாமிடம் : செ.அபிஷா ராணி ,6 ம் வகுப்பு
இறுதியில் திரு.வி.பீட்டர் சார்லஸ்,ப.ஆ நன்றியுரை ஆற்றிய பின்னர் மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டு விழா இனிதே நிறைவு பெற்றது.