Thursday, 25 November 2021

குழந்தைகள் தின சிறப்பு விருந்து.... நவம்பர் 15,2021.

 குழந்தைகள் தின சிறப்பு விருந்து.... நவம்பர் 15,2021.


கூவ.குரும்பபட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் முன்னாள் பிரதமர் பண்டித நேரு அவர்களின் பிறந்த நாளையொட்டி குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டது.
 இந்த நிகழ்வில் குழந்தைகள் தின விழா பள்ளியில் பல்வகை போட்டிகளுடன் சீருடனுடம் சிறப்புடனும் நடத்தபட்டது.
 அதைத்தொடர்ந்து நவம்பர் 15 2020 11 அனைத்து மாணவ மாணவியருக்கும் ஆசிரியர்கள் சார்பாக மதிய உணவாக அசைவ உணவு வழங்கப்பட்டது
















தேசிய குழந்தைகள்‌ தினத்தையொட்டி குழந்தைகள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்வு


தேசிய குழந்தைகள்‌ தினத்தையொட்டி  குழந்தைகள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு  நிகழ்வு

                                                     நவம்பர்‌ 14 முதல்‌ 20 வரை தேசிய குழந்தைகள்‌ தினம்‌/குழந்தைகள்‌ மீதான வன்கொடுமை தடுப்பு தினம்‌/சர்வதேச குழந்தை உரிமைகள்‌ தினம்‌ ஆகியவற்றை அனுசரிக்கும்‌ வகையில்‌ குழந்தைகள்‌மீதான வன்முறை தடுப்பு பிரச்சாரம் 18.11.2021 அன்று கூவ.குரும்பபட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது











                      பாலியல் புகார்கள் குறித்து புகார் தெரிவிக்க 1098, 14417 என்ற இலவச அழைப்பு எண் குறித்து இந்நிகழ்வில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது


இல்லம் தேடிக் கல்வி 23-11-2021 கூவ.குரும்பபட்டி குறுவளமையம் தலைமை ஆசிரியர்கள் கூட்டம்

 இல்லம் தேடிக் கல்வி 


கூவ.குரும்பபட்டி குறுவளமையம் தலைமை ஆசிரியர்கள் கூட்டம் 

 கொரோனா பெருந்தொற்றுப் பரவல் சார்ந்த பொது முடக்க காலங்களில் அரசு பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளை சரி செய்ய ‘இல்லம் தேடி கல்வித் திட்டம்’ என்ற திட்டத்தை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.

அதன்படி கூவ.குரும்பபட்டி குறுவளமையத்திற்குட்பட்ட தலைமை ஆசிரியர்கள் கூட்டம் 23-11-2021 அன்று கூவ.குரும்பபட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில்  நடைபெற்றது.