2018-19-ம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி வழங்கிய பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா
திண்டுக்கல் மாவட்டம் கூவ.குரும்பபட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் அக்னிச்சிறகுகள் சமூகசேவை மற்றும் இலவச பயிற்சி மையம் சார்பில் ஆசிரியர் தினவிழா மற்றும் பாராட்டு விழா 09-09-2019 அன்று நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளித் தலைமையாரிசியை அமுதா அவர்கள் தலைமை தாங்கி உறையாற்றினார். பள்ளி மாணவர் ராமராஜ் வரவேற்றார். பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் பீட்டர்சார்லஸ், தங்கராஜ் அவர்கள் முன்னிலை வகித்தனர்.
அக்னிச்சிறகுகள் நிறுவனர் முருகானந்தம் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி வழங்கிய ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் அக்னிச்சிறகுகள் விருது, பாராட்டுச் சான்றிதழ், மரக்கன்று வழங்கி கௌரவித்தார். கொசவபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவம் சாரா மேற்பார்வையாளர் சுந்தரம் அவர்கள் மாணவர்களுக்கு மருத்துவ சுகாதார கல்வி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இயற்கை வாழ்வியல் பாதை ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன் அவர்கள் மரம் வளர்ப்பு மற்றும் இயற்கை விவசாயம் பற்றி உரையாற்றினார்.
சமூக ஆர்வலர் வடிவேல் அவர்கள் நன்றி கூறினார். நிகழ்ச்சியின் நிறைவாக பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது.