இக்கூட்டத்தில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களின் பணிகள், செயல்பாடுகள் அவர்களின் பங்களிப்பின் அவசியம் குறித்தும் தலைமை ஆசிரியர் ரா .அமுதா அவர்கள் விரிவாக விளக்கி கூறினார்.
பின்னர் பதவி வழி உறுப்பினர்கள் குறித்த விவரங்கள் தலைமை ஆசிரியரால் அறிவிக்கப்பட்டது கூட்ட அழைப்பாளராக தலைமை ஆசிரியர் என்ற முறையில் திருமதி. ரா .அமுதா அவர்களும் ஆசிரியர் குழுவின் பிரதிநிதியாக கணித பட்டதாரி ஆசிரியர் திரு. வி. பீட்டர் சார்லஸ் அவர்களும் கல்வி ஆர்வலராக கூவ. குரும்பபட்டி இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் .செல்வி. சிவரஞ்சனி அவர்களும் ஊராட்சி மன்ற பிரதிநிதிகளாக ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் திருமதி. பிரியா கணேசன் மற்றும் திருமதி.பாண்டிச்செல்வி கனகு ஆகியோரும் பொறுப்பு வகிப்பர் என்று அறிவித்தார்.
அதைத் தொடர்ந்து மீதமுள்ள 15 உறுப்பினர்களுக்கான தேர்வு நடைபெறும் என்பதை முறைப்படியாக அறிவித்தார் அதில் ஆறு முதல் எட்டு வரை பயிலும் மாணவர்களின் பெற்றோர் 8 பேரும் 9ம் வகுப்பு பயிலும் மாணவர்களின் பெற்றோர்களில் ஏழு பேரும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என அறிவித்தார்.
15 நபர்களில் பெயர்கள் முன்மொழியப்பட்டு வழிமொழியப்பட்டு ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான தேர்வு நடைபெறுவதாக தலைமை ஆசிரியரால் அறிவிக்கப்பட்டது
பின்னர் பள்ளி மேலாண்மை குழு தலைவராக திருமதி .ஜோதி என்பவரும் துணைத் தலைவராக திருமதி.வீரமணி என்பவரும் அனைத்து உறுப்பினர்களின் ஏகோபித்த வரவேற்புடன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு தலைமை ஆசிரியர் தேர்வு பெற்றமைக்கான ச் சான்றிதழ்களை வழங்கினார்.
பின்னர் அனைவரும் ஒருங்கிணைந்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்
இந்த தேர்வு நடைமுறை அனைத்தும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனரும் கூட்டநிகழ்விற்கு பார்வையாளராக நியமிக்கப்பட்ட திருமதி . சகாய சுதா அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது