Monday, 12 September 2022

சமூக நலத்துறை - மனநலம், குழந்தைகள் மீதான வன்முறையைத் தடுத்தல், தன்னம்பிக்கையை வளர்த்தல், போதைப் பொருள்களுக்கு அடிமையாதலைத் தடுத்தல், தன் சுத்தம் பேணுதல் போன்ற பொருண்மைகளில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

அரசு உயர்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு மனநலம், குழந்தைகள் மீதான வன்முறையைத் தடுத்தல், தன்னம்பிக்கையை வளர்த்தல், போதைப் பொருள்களுக்கு அடிமையாதலைத் தடுத்தல், தன் சுத்தம் பேணுதல் போன்ற பொருண்மைகளில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த சமூக பாதுகாப்புத் துறை வழிகாட்டி நெறிமுறையை வடிமைத்துள்ளது. இவ்விழிப்புணர்வில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக பணியாளர்கள், குழந்தை நலக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள், இளைஞர் நீதி குழுமம் உறுப்பினர்கள், சைல்டு லைன் பணியாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களை இணைத்து விழிப்புணர்வு வழங்கவும், மேலும் இதுதொடர்பான எதிர்நோக்கு திட்டமிட்டு மாவட்ட ஆட்சியர் அவர்களின் ஒப்புதல் பெற்று வழங்க தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கூவ.குரும்ப பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில்
  பொருள் சார்பாக சார்ந்த அலுவலர்கள் 12-09-2022 அன்று பள்ளிக்கு வருகை புரிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்


No comments:

Post a Comment