Saturday, 27 August 2022
Friday, 26 August 2022
Tuesday, 23 August 2022
மாவட்டக் கல்வி அலுவலரின் ஆண்டாய்வு
திண்டுக்கல் மாவட்ட கல்வி அலுவலர் திரு. கு .ஜான் பாக்கிய செல்வம் அவர்கள் 23.08. 2022 செவ்வாய்க்கிழமை கூவ. குரும்பபட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆண்டாய்வு செய்தார்.
இந்த ஆண்டாய்வின் போது பத்தாம் வகுப்பு மாணவர்கள் நடைபெற்ற முதல் இடைத் தேர்வில் பாடவாரியாக மதிப்பெண் முதலிடம் பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகளை வழங்கிட ஆசிரியர்களை ஊக்குவித்து மாணவ மாணவியர்களை உற்சாகப்படுத்தினார்.
இந்த நிகழ்வின் போது பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி. ரா. அமுதா மற்றும் ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.
Monday, 15 August 2022
75வது சுதந்திர தின அமுதப் பெருவிழா கொண்டாட்டம்
இந்திய திருநாட்டின் 75 வது சுதந்திர தின விழாவானது கூவ குடும்ப பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் அமுதப் பெருவிழாவாக கொண்டாடப்பட்டது.
தலைமை ஆசிரியர் திருமதி ரா அமுதா அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை நிகழ்த்தினார். சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வரலாறு குறித்து சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர் திரு. வி .பவுல்ராஜ் அவர்கள் மாணவர்களுக்கு உரை நிகழ்த்தினார்.
பின்னர் மாணவர் மாணவியர் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது
Friday, 12 August 2022
போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
போதைப் பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு சுகாதாரத்துறை அலுவலர்கள் பள்ளிக்கல்வித்துறை உடன் சேர்ந்து விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தி வருகின்றனர் அதன் ஒரு நிகழ்வாக நமது கூவ குறும்பொட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் இன்று 12.08. 2022 காலை 11 மணியளவில்பள்ளி மாணவர்களுக்கு போதை பொருள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகளை நடத்தினர். போதைப்பொருள் விழிப்புணர்வு சார்ந்த உறுதி மொழியை மாணவர்கள் அனைவரும் ஏற்றனர்
Subscribe to:
Posts (Atom)
-
கணித புதிர் 3க்கு சரியாக பதில் அளித்தவர்கள் ... 1.கோ.காளீஸ்வரி 10ம் வகுப்பு 2.அழகர் சாமி 8ம் வகுப்பு ...
-
நமது பள்ளியின் கியூ ஆர் கோட் . நமது பள்ளியின் கியூ ஆர் கோட் ஐ ஸ்கேன் செய்து ,பள்ளி நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளவும்.
-
ஆறாம் வகுப்பு கணித பாடத்தின் கியூ ஆர் கோட் வீடியோஸ் . உலகில் பல பேசும் மொழிகள் இருந்தாலும்,உலகின் ஒரே பொது மொழி கணிதமாகும். கணிதமானது ...