Tuesday, 23 August 2022

மாவட்டக் கல்வி அலுவலரின் ஆண்டாய்வு

திண்டுக்கல் மாவட்ட கல்வி அலுவலர் திரு. கு .ஜான் பாக்கிய செல்வம் அவர்கள் 23.08. 2022 செவ்வாய்க்கிழமை கூவ. குரும்பபட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆண்டாய்வு செய்தார்.

 இந்த ஆண்டாய்வின் போது பத்தாம் வகுப்பு மாணவர்கள் நடைபெற்ற முதல் இடைத் தேர்வில் பாடவாரியாக மதிப்பெண் முதலிடம் பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகளை வழங்கிட ஆசிரியர்களை ஊக்குவித்து மாணவ மாணவியர்களை உற்சாகப்படுத்தினார்.
 இந்த நிகழ்வின் போது பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி. ரா. அமுதா மற்றும்  ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.

தமிழ்நாடு காவல்துறை- அனைத்து மகளிர் காவல் நிலையம் ,சாணார்பட்டி-பள்ளி மாணவ மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி


Monday, 15 August 2022

75வது சுதந்திர தின அமுதப் பெருவிழா கொண்டாட்டம்

இந்திய திருநாட்டின் 75 வது சுதந்திர தின விழாவானது கூவ குடும்ப பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் அமுதப் பெருவிழாவாக கொண்டாடப்பட்டது.

 தலைமை ஆசிரியர் திருமதி ரா அமுதா அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை நிகழ்த்தினார். சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வரலாறு குறித்து சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர் திரு. வி .பவுல்ராஜ் அவர்கள் மாணவர்களுக்கு உரை நிகழ்த்தினார்.
 பின்னர் மாணவர் மாணவியர் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது












Friday, 12 August 2022

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

போதைப் பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு சுகாதாரத்துறை அலுவலர்கள் பள்ளிக்கல்வித்துறை உடன் சேர்ந்து விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தி வருகின்றனர் அதன் ஒரு நிகழ்வாக நமது கூவ குறும்பொட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் இன்று 12.08. 2022 காலை 11 மணியளவில்பள்ளி மாணவர்களுக்கு போதை பொருள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகளை நடத்தினர். போதைப்பொருள் விழிப்புணர்வு சார்ந்த உறுதி மொழியை மாணவர்கள் அனைவரும் ஏற்றனர்