Thursday, 31 March 2022

6ம் வகுப்புபயிலும் மாணவர்களுக்கு, அனைத்து பாடங்களிலும் அவர்களது கற்றல் அடைவை சோதிக்கும்வகையில், இணையதள வழியாக (Hi-Tech Lab வாயிலாக) நடைபெற்ற வினாடி வினாவில் மாவட்ட அளவில் 35 இடங்களை பெற்று நம் பள்ளி மாணவி சாரு தர்ஷனா ரூ 2000/- மதிப்புள்ள பரிசு பெறுகிறார்

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, 2021-2022 ஆம் கல்வி
ஆண்டிற்கான திட்ட ஏற்பளிப்புக் குழு ஒப்புதல் அறிக்கையில் (PAB Minutes) உள்ளபடி
செய்துணர் கற்றல் திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கு வினாடி வினா போட்டி (Quiz
Competition) நடத்துவதற்காக தொடக்கநிலையில், 6,948 அரசு நடுநிலைப் பள்ளிகளுக்கு,
பள்ளி ஒன்றுக்கு ரூ. 400/- வீதம் 27.79 இலட்சம் நிதி அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அனைத்து அரசு நடுநிலை/உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு
பயிலும் மாணவர்களுக்கு, அனைத்து பாடங்களிலும் அவர்களது கற்றல் அடைவை சோதிக்கும்
வகையில், இணையதள வழியாக (Hi-Tech Lab வாயிலாக) ஒவ்வொரு வினாவிற்கும்
கொடுக்கப்பட்ட விடைகளில் இருந்து சரியான பதிலைத் தெரிவு செய்யும் விதமாக Basic Quiz
நடத்தப்பட்டுள்ளது. வினாக்கள் அனைத்தும் SCERT- ஆல் தயாரிக்கப்பட்டு EMIS வாயிலாக
போட்டிகள் நடத்தப்பட்டது.
மாணவர்களை ஊக்கப்படுத்தவும், கற்றலின்மீது அவர்களது ஆர்வத்தைத் தூண்டும்
விதமாகவும், அவர்களுக்கு பரிசளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

6 ஆம் வகுப்பு
பயிலும் மாணவர்களுக்கு, அனைத்து பாடங்களிலும் அவர்களது கற்றல் அடைவை சோதிக்கும்
வகையில், இணையதள வழியாக (Hi-Tech Lab வாயிலாக) ஒவ்வொரு வினாவிற்கும்
கொடுக்கப்பட்ட விடைகளில் இருந்து சரியான பதிலைத் தெரிவு செய்யும் விதமாக Basic Quiz
நடத்தப்பட்டது. வினாக்கள் அனைத்தும் SCERT- ஆல் தயாரிக்கப்பட்டு EMIS வாயிலாக
போட்டிகள் நடத்தப்பட்டது.
மாணவர்களை ஊக்கப்படுத்தவும், கற்றலின்மீது அவர்களது ஆர்வத்தைத் தூண்டும்
விதமாகவும், அவர்களுக்கு பரிசளிக்க திட்டமிடப்பட்டு, வினாடி வினாவில் மாவட்ட அளவில் முதல் 35  மாணவர்களின் பட்டியலில் இடம் பெற்று கூவ.குரும்ப பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி 6ம் வகுப்பு மாணவி பெ.சாரு தர்ஷனா ரூ 2000/- மதிப்புள்ள பரிசு பெறுகிறார்.

💐💐💐💐💐 மாணவிக்கும் ஆசிரிய பெருமக்களுக்கும் வாழ்த்துகள்💐💐💐💐💐

 

No comments:

Post a Comment