75வது சுதந்திரத்திருநாள் அமுதப் பெருவிழா
01-12-2021 முதல் 15-12-2021 வரை
சுதந்திர போராட்டத்தில் கலந்துகொண்ட அதிகம் அறியப்படாத சுதந்திர போராட்டத் தலைவர்கள் 75 பேர்
இந்தியாவின் 75 வது சுதந்திர தினவிழாவினை,
சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவாக 75 வாரங்களுக்கு
சிறப்பாக கொண்டாட அரசால் முடிவு செய்யப்பட்டு சுதந்திர போராட்ட நிகழ்வுகளை நினைவு கூரும்
விதமாக திண்டுக்கல் மாவட்டத்தில் டிசம்பர்
1 முதல் டிசம்பர் 15 வரை சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா நிகழ்வினை சிறப்பாக நடத்திட
மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அவர்களால்
அறிவுறுத்தப்பட்டதன் அடிப்படையில். கூவ குரும்பபட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் 75வது
சுதந்திர திருநாள் அமுத பெருவிழா கொண்டாடப்பட்டது.
1.சுதந்திரப்
போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களைப் பற்றிய தகவல்களை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வழங்குதல்.
கூவ குரும்பபட்டி,
அரசு உயர்நிலைப்பள்ளியில் 75வது சுதந்திர திருநாள் அமுத பெருவிழா நிகழ்வில் முதல் நாள்
நிகழ்ச்சிகள் நடைபெற்றது .01-12-2021 இன்றைய நிகழ்விற்கு தலைமையாசிரியர் தலைமையேற்று
சிறப்புரை வழங்கினார். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்குகொண்டனர். இவ்விழாவில் சுதந்திர
போராட்டத்தில் கலந்துகொண்ட அதிகம் அறியப்படாத சுதந்திரப் போராட்ட தலைவர்களைப் பற்றியும்
அவர்களின் புகைப்படம் மற்றும் வீடியோ தொகுப்புடன் மாணவர்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது
.முக்கியத் தலைவர்களாக கேளப்பன், வைரப்பன், கோவிந்தம்மாள் மற்றும் பலரின் சுதந்திர
செயல்பாடுகள் பற்றியும் மாணவர்களுக்கு சொல்லப்பட்டது
2.சுதந்திர
போராட்ட வரலாற்றில் இடம்பெற்று அதிகம் அறியப்படாத மிக முக்கியமான தலைவர்கள் பற்றிய தகவல்களை மாணவர்கள் திரட்டிவந்து கருத்துக்களை
ஆசிரியர்களுடன் கலந்துரையாடல்.
கூவ குரும்ப பட்டி,அரசு உயர்நிலைப்பள்ளி யில் 75வது சுதந்திர திருநாள் அமுத
பெருவிழா இரண்டாம் நாள் நிகழ்வு 2 -12 - 2021 அன்று சிறப்பாக
நடைபெற்றது இந்நாளில் மாணவர்கள் தங்கள் பகுதியில் வசிக்கும் சுதந்திரப் போராட்டத்தில்
ஈடுபட்ட தலைவர்கள் யாரும் இல்லை. எனவே வயது முதிர்ந்த அவர்களிடம் இருந்து சில முக்கிய
கருத்துக்களை தெரிந்து கொண்டு இந்த நிகழ்ச்சியில் ஒன்பதாம் வகுப்பு மாணவி நிஷாந்தி
மற்றும் ஹேமலதா அவர்கள் சுதந்திரப் போராட்டத்தில் நடந்த பல்வேறு நிகழ்ச்சியை மாணவர்கள் மத்தியில் விளக்கி கூறி கலந்துரையாடல்
செய்தனர். மேலும் பள்ளியின் சமூக அறிவியல்
ஆசிரியர் சுதந்திரப் போராட்டத்தில் அதிகம்
அறியப்படாத தலைவர்களான அருணா ஆசப் அலி, ருக்மணி லட்சுமிபதி மற்றும் பல தலைவர்களைப் பற்றி மாணவர்களுக்கு விளக்கி
கூறினார்.
3.தங்கள்
பகுதியில் வாழும் சுதந்திர போராட்ட வீரர் இருப்பின் அவரை பள்ளிக்கு வரவழைத்து அவருடைய
சுதந்திர போராட்ட அனுபவங்களை மாணவர்களிடம் பகிரச் செய்தல்
கூவ. குரும்பபட்டி
அரசு உயர்நிலைப்பள்ளி 75வது சுதந்திர திருநாள்
அமுத பெருவிழா மூன்றாம் நாள் நிகழ்வு 3- 12- 2021 அன்று நடைபெற்றது.
இன்றைய நிகழ்வில் இப்பகுதியில் சுதந்திர போராட்ட
வீரர் யாரும் இல்லாத காரணத்தால் பள்ளிக்கு அழைத்து வர இயலவில்லை .ஆதலால் பள்ளியின்
சமூக அறிவியல் ஆசிரியர் மற்றும் கணித ஆசிரியர் மாணவர்களை ஊருக்குள் அழைத்து சென்று
அங்கு 90 வயதுடைய முதியவரிடம் சுதந்திர நிகழ்வுகள் பற்றிய முக்கிய கருத்துக்களை மாணவர்களிடம்
பகிர கூறினர். மாணவர்களும் முதியவரிடம் பல கேள்விகள் கேட்டு பல கருத்துக்களை தெரிந்து கொண்டபின் மாணவர்கள்
முதியவருடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர்
4.
சுதந்திர போராட்டத்தில் அறியப்படாத போராட்ட
தலைவர்கள் பற்றிய தகவல்களை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வழங்குதல். மாணவர்கள் தங்களிடம் உள்ள தகவல்களை ஆசிரியர்களுக்கு
வழங்கி கலந்துரையாடல்.
கூவ குரும்பபட்டி ,அரசு உயர்நிலைப்பள்ளியில் 75வது சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவின் நான்காம்
நாள் நிகழ்வு 04- 12- 2021 அன்று கொண்டாடப்பட்டது இந்தநிகழ்விற்கு தலைமை ஆசிரியர்
தலைமை வகித்தார். பள்ளியின் சமூக அறிவியல் ஆசிரியர் மற்றும் மாணவர்கள் அதிகம் அறியப்படாத
சுதந்திர போராட்ட தலைவர்கள் பற்றி பேசப்பட்டது சுதந்திர போராட்ட தலைவர்கள் மதுரை சிதம்பர
பாரதி. எஸ் என் சுந்தராம்பாள். ருக்மணி லட்சுமிபதி மற்றும் பல தலைவர்களைப் பற்றியும்
ஆசிரியர் மாணவர்கள் கலந்துரையாடல் நடைபெற்றது. மேலும் மற்ற தலைவர்களின் புகைப்படம்
வீடியோ தொகுப்பு மாணவர்களுக்கு காண்பிக்கப்பட்டது.
5.சுதந்திர
போராட்ட வரலாற்றில் அதிகம் அறியப்படாத தலைவர்கள் பற்றி கட்டுரைப் போட்டி நடத்துதல்.
கூவ.குரும்ப பட்டி,அரசு உயர்நிலைப்பள்ளியில் 75வது சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவின்
ஐந்தாம் நாள் நிகழ்வு 06- 12-2021 அன்று நடைபெற்றது. மாணவர்களுக்கு இந்தியாவில் அதிகம் அறியப்படாத
சுதந்திர போராட்ட தலைவர்கள் என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில்
பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இப்போட்டியில் குறிப்பாக ஒன்பது மற்றும்
பத்தாம் வகுப்பு மாணவ மாணவியர் பங்கேற்று தங்கள் கருத்துக்களை கட்டுரை வாயிலாக எழுதி
கொடுத்தனர்.
6.சுதந்திர
போராட்ட வரலாற்றில் அதிகம் அறியப்படாத தலைவர்களின் ஓவியம் வரைதல் போட்டி,
7,சுதந்திர
போராட்டத்தில் அதிகம் அறியப்படாத தலைவர்களை வெளிப்படுத்தும் வகையில் அவர்களுடைய வாழ்க்கை
வரலாற்றை நாடகமாக நடித்துக்காட்டச் செய்தல்.
கூவ.குரும்ப பட்டி,அரசு உயர்நிலைப்பள்ளியில் 75வது சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவின் ஏழாம் நாள் நிகழ்வு 08- 12-2021 அன்று நடைபெற்றது. இன்றைய நிகழ்வில் சுதந்திரப் போராட்டத்தில் அதிகம் அறியப்படாத தலைவர்களை வெளிப்படுத்தும் வகையில் அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு நாடகம் நடித்துக் காட்டப்பட்டது. இந்த நாடகத்திற்கு ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் ஒரு குழுவாக அமைத்து நாடகத்தில் நடித்தனர் இதில் சுதந்திர போராட்ட தியாகி எஸ் என் சுந்தராம்பாள் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவர்களின் சுதந்திர நிகழ்வுகளும் நாடகமாக சிறப்பாக மாணவர்களுக்கு நடித்து காட்டினர்.
8.
பேச்சுப்போட்டி- சுதந்திர போராட்டத்தில் அதிகம் அறியப்படாத தலைவர்கள் வெளிப்படுத்தும்
வகையில் அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றை விளக்குதல் ( ஒவ்வொரு நபரும் ஒரு தலைவர் பற்றி
- பேச்சுப்போட்டி)
கூவ.குரும்ப பட்டி,அரசு உயர்நிலைப்பள்ளியில் 75வது சுதந்திர
திருநாள் அமுத பெருவிழாவின் எட்டாம் நாள் நிகழ்வு
09- 12-2021 அன்று நடைபெற்றது. இன்றைய
நிகழ்வில் சுதந்திர போராட்டத்தில் அதிகம் அறியப்படாத தலைவர்கள் வெளிப்படுத்தும் வகையில்
அவருடைய வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில் மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது.
இப்போட்டியில்
மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். பேச்சுப்போட்டியில் மாணவர்கள் பலர் கலந்து
கொண்டு சுதந்திரப் போராட்ட வீரர்களான கமலா ராமசாமி சுந்தரலிங்கனார் கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்
மற்றும் பல தலைவர்களைப் பற்றியும் சிறப்பாக
பேசினர்.
10.
கிராமியப்பாடல், கவிதை வாயிலாக அதிகம் அறியப்படாத தலைவர்கள் பற்றிய தகவல்களை மாணவர்கள்
வழங்குதல்.
கூவ.குரும்ப பட்டி,அரசு உயர்நிலைப்பள்ளியில் 75வது சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவின் பத்தாம் ம் நாள் நிகழ்வு 11- 12-2021 அன்று நடைபெற்றது. இன்றைய நிகழ்வில் கிராமிய பாடல் மற்றும் கவிதை வாயிலாக அதிகம் அறியப்படாத தலைவர்களைப் பற்றி அவர்களுடைய கருத்துக்களை மாணவர்கள் வழங்கினர் இதில் ஏழாம் வகுப்பு மாணவன் சரவணன் மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவன் மோகன் கிராமிய பாடல் மூலம் சுதந்திர போராட்ட தலைவர்கள் நீலகண்ட பிரம்மச்சாரி, விஸ்வநாததாஸ், சீனிவாச பிள்ளை, ஜானகி ஆதி நாகப்பன் மற்றும் பல தலைவர்களைப் பற்றி பாடினார்கள் மாணவர்களும் ஆசிரியர்களும் உற்சாகமாக கவிதைகளையும் பாடல்களையும் கேட்டு மகிழ்ந்தனர்.
11.
விளையாட்டு நிகழ்ச்சிகள் நடத்தி அதன் வாயிலாக சிக்கலான அதிகம் அறியப்படாத தலைவர்கள்
பற்றிய தகவல்களை சரியான முறையில் பொருத்தி அறிந்து கொள்ளச்செய்தல். (எ.கா) - சக்கரநாற்காலி, வினாடிவினா.
கூவ.குரும்ப பட்டி,அரசு உயர்நிலைப்பள்ளியில் 75வது சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவின் 11 ஆம் நாள் நிகழ்வு 13- 12-2021 அன்று நடைபெற்றது. இந்த விழாவில் சுதந்திர போராட்டத்தில் அதிகம் அறியப்படாத தலைவர்கள் பற்றிய தகவல்களை சரியான முறையில் பொருத்தி அறிந்து கொள்ளச்செய்யும் வகையில் மாணவர்களுக்கு வினாடிவினா நடத்தப்பட்டது. இவ்வினாடிவினாவில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
12.
களப்பயணம்-பள்ளி அமைந்துள்ள பகுதியில் உள்ள வயதான சுதந்திர போராட்ட காலத்தில் வாழ்ந்த
வயதில் மூத்தோர்களிடம் சென்று அவர்களின் அனுபவங்களை செய்தியாக சேகரித்தல்.
கூவ.குரும்பபட்டி, அரசு உயர்நிலைப்பள்ளியில் 75வது சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவின்
பணிரெண்டாம் நாள் நிகழ்வு 14- 12-2021 அன்று நடைபெற்றது இந்த நிகழ்வில் சுதந்திரப் போராட்டத்தில்
அதிகம் அறியப்படாத தலைவர்களை பற்றி மாணவர்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது. களப்பயணமாக
பள்ளிக்கு அருகாமையில் உள்ள கிராமம் கூவ குரும்ப பட்டியில் சுதந்திர போராட்ட காலத்தில்
வாழ்ந்த வயதில் மூத்தோர் ஒருவரை சந்தித்து அவர்களிடம் சுதந்திரப் போராட்ட அனுபவங்களையும்
அக்காலத்தில் ஏற்பட்ட நிகழ்வுகளையும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார் . மாணவர்கள் உற்சாகத்துடன்
பல கேள்விகள் கேட்டு அதன்மூலம் பல தகவல்களை அறிந்து கொண்டு பள்ளிக்குத் திரும்பினர்.
13.கண்காட்சி-சுதந்திர
போராட்டத்தில் பங்குவகித்த முக்கிய இடங்கள் தலைவர்கள், நாணயங்கள் ஆகியவற்றினை கண்காட்சிபடுத்துதல்.
கூவ.குரும்பபட்டி, அரசு உயர்நிலைப்பள்ளியில் 75வது சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவின் பதிமூன்றாம் நாள் நிகழ்வு 15- 12-2021 அன்று நடைபெற்றது இந்த நிகழ்வில் சுதந்திரப் போராட்டத்தில் பங்குவகித்த முக்கிய இடங்கள் தலைவர்கள், நாணயங்கள் ஆகியவற்றினை கண்காட்சிபடுத்தும் வகையில் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது..கண்காட்சியை தலைமை ஆசிரியர் திருமதி.ரா.அமுதாஅவர்கள் துவக்கிவைத்தார்.மாணவ மாணவியர் இக்கண்காட்சியை கண்டுகளித்தனர்
-அருமை
ReplyDelete