Thursday, 27 July 2017

இன்று முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவு தினம்-வணங்குகிறோம்

                  நீ.. நீயாக இரு...! இன்று முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவு தினம்






இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானிதொழில்நுட்ப வல்லுநர்மிகப்பெரியபொருளாளர்இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர்இந்திய ஏவுகணைநாயகன்இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தைசிறந்த ஆசிரியர் மற்றும்
அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர்வருங்கால இளைஞர்களின்முன்மாதிரியாக கருதப்படும் நம் எல்லோருக்கும் தெரிந்த .பி.ஜே அப்துல்கலாமின் வாழ்க்கை வரலாறு.

��பிறப்புஅக்டோபர் 15, 1931

மரணம்ஜூலை 27, 2015

இடம்இராமேஸ்வரம் (தமிழ் நாடு)

பிறப்பு:

1931 ஆம் ஆண்டுஅக்டோபர் மாதம் 15 ஆம் நாள் ஜைனுலாப்தீனுக்கும்,ஆஷியம்மாவுக்கும் மகனாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில்பாம்பன்தீவில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறியநகராட்சியான இராமேஸ்வரத்தில் பிறந்தார்இவர் ஒரூ இஸ்லாமிய குடும்பத்தைசேர்ந்தவர்.

��இளமைப் பருவம்:

அப்துல் கலாம்இராமேஸ்வரத்திலுள்ள தொடக்கப்பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை தொடங்கினார்ஆனால் இவருடைய குடும்பம் ஏழ்மையில்இருந்ததால்இளம் வயதிலே இவர் தன்னுடைய குடும்பத்திற்காக வேலைக்குச்சென்றார்பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் இவர் செய்தித்தாள்கள்விநியோகம் செய்தார்இவருடைய பள்ளிப்பருவத்தில் இவர் ஒரு சராசரிமாணவனாகவே வளர்ந்தார்.

��கல்லூரி வாழ்க்கை:

தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்தபிறகுதிருச்சிராப்பள்ளியிலுள்ளசெயின்ட் ஜோசப் கல்லூரியில்” இயற்பியல் பயின்றார். 1954ஆம் ஆண்டு,இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார்ஆனால்இயற்பியல் துறையில்ஆர்வம் இல்லை என உணர்ந்த இவர், 1955 ஆம் ஆண்டு தன்னுடையவிண்வெளி பொறியில் படிப்பை” சென்னையிலுள்ள எம்..டி-யில்தொடங்கினார்பின்னர் அதே கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

��விஞ்ஞானியாக .பி.ஜே அப்துல் கலாம்:   

1960 ஆம் ஆண்டு வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் (DRDO)விஞ்ஞானியாக தன்னுடைய ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கிய அப்துல்கலாம்ஒரு சிறிய ஹெலிகாப்டரை இந்திய ராணுவத்திற்காக வடிவமைத்துகொடுத்தார்பின்னர்இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் (ISRO) தனதுஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்த அவர்துணைக்கோள் ஏவுகணைக் குழுவில்(SLV) செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கிய பங்காற்றினார். 1980 ஆம் ஆண்டுSLV -III ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி-I என்ற துணைக்கோளைவெற்றிகரமாக விண்ணில் ஏவச்செய்தார்இது அவருக்கு மட்டுமல்லாமல்,இந்தியாவிற்கே ஒரு சாதனையாக அமைந்தது.  இத்தகைய வியக்கதக்கசெயலைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு 1981 ஆம் ஆண்டு இந்தியாவின்மிகப் பெரிய விருதான “பத்ம பூஷன்” விருது வழங்கி கௌரவித்தது.  1963ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரைஇந்திய விண்வெளி ஆராய்ச்சிகூடத்தில் பல பணிகளை சிறப்பாக செய்த இவர், 1999 ஆம் ஆண்டுபொக்ரான் அணு ஆயுத சோதனையில்” முக்கிய பங்காற்றியுள்ளார்.இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய .பி.ஜே அப்துல் கலாம்,இதுவரை ஐந்து ஏவுகணை திட்டங்களில் பணிபுரிந்துள்ளார்அவர்,அனைவராலும் இந்திய ராணுவ ராக்கெட் படைப்பின் பிதாவாகபோற்றப்படுகிறார்.

��குடியரசுத் தலைவராக .பி.ஜே அப்துல் கலாம்:   

2002 ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று,இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக ஜூலை 25 ஆம் நாள் 2002 ல்பதவியேற்றார்குடியரசு தலைவராவதற்கு முன்இந்தியாவின் மிகப்பெரியவிருதான “பாரத ரத்னா விருது” மத்திய அரசு இவருக்கு வழங்கி கௌரவித்தது.மேலும், “பாரத ரத்னா” விருது பெற்ற மூன்றாவது குடியரசு தலைவர் என்றபெருமையைப் பெற்றார். 2007 ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராகஇருந்த இவர் “மக்களின் ஜனாதிபதி” என்று அனைவராலும் அன்போடுஅழைக்கப்பட்டார். 2007 ஆம் ஆண்டு குடியரசுத் தேர்தலில் மீண்டும்போட்டியிட நினைத்த கலாம்பிறகு பல காரணங்களால் அந்த தேர்தலில்போட்டியிட போவதில்லை என முடிவு செய்து விலகினார்.

��மரணம்:

அப்துல் கலாம் அவர்கள் ஜூலை 27, 2015 ஷில்லாங்கில் உள்ள இண்டியன்இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் மேடையில்பேசிக்கொண்டிருந்தபோதே மயங்கி விழுந்து மறித்தார்.


 ��விருதுகள்:

1981 – பத்ம பூஷன்

1990 – பத்ம விபூஷன்

1997 – பாரத ரத்னா

1997 – தேசிய ஒருங்கிணைப்பு இந்திராகாந்தி விருது

1998 – வீர் சவர்கார் விருது

2000 – ராமானுஜன் விருது

2007 – அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம்

2007 – கிங் சார்லஸ்-II பட்டம்

2008 – பொறியியல் டாக்டர் பட்டம்

2009 – சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது

2009 – ஹூவர் மெடல்

2010 – பொறியியல் டாக்டர் பட்டம்

2012 –  சட்டங்களின் டாக்டர்

2012 – சவரா சம்ஸ்க்ருதி புரஸ்கார் விருது

.பி.ஜே அப்துல் கலாம் எழுதிய நூல்கள்:

அக்னி சிறகுகள்இந்தியா 2020எழுச்சி தீபங்கள்அப்புறம் பிறந்தது ஒரு புதியகுழந்தை

இறுதிவரைக்கும் பிரம்மச்சாரியாக வாழ்ந்த .பி.ஜே அப்துல் கலாமின்எளிமையான வாழ்க்கையும்அவரது இனிமையான பேச்சும் எல்லோரையும்கவர்ந்தது என்றால் வியப்பில்லை. ‘எதிர்கால இந்திய இளைஞர்கள் கையில்என்ற அவர் “கனவு காணுங்கள்அந்த கனவை நினைவாக்க பாடுபடுங்கள்என்னும் வாக்கியத்தை இளைஞர்களின் மனதில் வேரூன்ற செய்தவர்.


உலகம் போற்றும் விஞ்ஞானியான கலாம் தன்னுடைய பொன்மொழிகளாலும்,கவிதைகளாலும்வாசகங்களாலும் அனைவரின் மனதிலும் நீங்கா இடம்பிடித்துள்ளார்.




ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பில் அப்துல்கலாம் தேசிய நினைவகம், நான்கு புறமும் 50க்கு 50 மீட்டர் அளவில் சதுர வடிவில் அமைந்துள்ளது. நினைவகத்தை சுற்றி ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி இருந்து கொண்டு வரப்பட்ட அழகு செடிகள், நிழல் தரும் மரக்கன்றுகள் ஊன்றி அழகுபடுத்தி உள்ளனர்.

நினைவகத்தின் பின்புறத்தில் கலாம் கண்டு பிடித்த அக்னி ஏவுகணை, எஸ்.எல்.வி., ராக்கெட் மாதிரி வைக்கப்பட்டும், நினைவகத்திற்குள் நான்கு பக்கங்களிலும் மின் ஒளியில் கலாமின் ஓவியங்கள், சிலைகள் உள்ளன. ஒரு மூலையில் பொக்ரான் அணுகுண்டு சோதனைக்கு பிறகு முன்னாள் பிரதமர் வாஜ்பாயுடன், கலாம் நிற்பது, எஸ்.எல்.வி., ராக்கெட் மாதிரியை கலாம் அறிமுகப்படுத்துவது, ராணுவ வீரர்கள் அணிவகுப்பை கலாம் ஏற்பது போன்ற தத்ரூபமான சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.மற்றொரு புறத்தில் கலாம் ஐ.நா., சபையில் பேசுவது, ஜனாதிபதி மாளிகையில் கலாம் நிற்பது, குழந்தைகளிடம் கலாம் கைகொடுத்து சிரித்து பேசுவது போல் ஓவியங்களை தத்ரூபமாக வரைந்துள்ளனர்.

95 ஓவிய படங்கள் : கலாம் குழந்தை பருவம் முதல் ஜனாதிபதி வரை பல முகபாவனையுடன் கூடிய 95 ஓவியம் 4 முதல் 15 அடி உயரமும், ஜனாதிபதியாக கலாம் அமர்ந்திருப்பது போல் சிலிக்கானில் உருவான கலாம் சிலையும் உள்ளது.

மேலும் கலாமின் 700 புகைப்படங்கள் உள்ளன. கலாம் சமாதி முன் சுவரில் 15 அடி உயரத்தில் சிறுவயதில் கலாம் பேப்பர் விற்பது, கோயில், கடற்கரை, படகுகள் நிறைந்த அழகிய ஓவியம் இடம் பெற்றுள்ளது. நினைவகம் மேற்கூரையில் புகழ் பெற்ற ராஜஸ்தான் ஓவியம் வரைந்து, கலாம் நினைவகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.



No comments:

Post a Comment