Thursday, 22 September 2022
Wednesday, 21 September 2022
Friday, 16 September 2022
சுற்றுச் சூழல் மன்றம் - உலக ஓசோன் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
உலக ஓசோன் தினத்தை ஒட்டி அறிவியல் பட்டதாரி ஆசிரியர் திரு சு.செல்லப்பாண்டி அவர்கள் மாணவர்களுக்கு விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார்
*செப்டம்பர் – 16 - சர்வதேச ஓசோன் பாதுகாப்பு தினம்*
சர்வதேச ஓசோன் பாதுகாப்பு தினமானது ஓசோன் படலத்தை பாதுகாக்கும் நோக்கத்தில் கொண்டாடப்படுகிறது.
பூமியில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் பாதுகாப்பு வழங்கும் ஒரு படலம் ஓசோன். ஆனால் தற்போது இதன் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பது கவலைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
ஆக்ஸிஜனின் மூன்று அணுக்கள் ஒன்று சேர்ந்தது தான் ஓசோன் அடுக்கு அல்லது படலம் என்பர். ஓசோன் அடுக்கு என்பது ஒரு வாயு கவசமாகும். இது பூமியின் அடுக்கு மண்டலத்தில் மிக முக்கியமான அங்கமாக இருக்கிறது. ஏனெனில் சூரியனில் இருந்து வெளிப்படும் சில புற ஊதா கதிர்கள் நம்மில் தோல் புற்றுநோய்கள், கண் பாதிப்புகள், கண்புரை, நோயெதிர்ப்பு ஒடுக்கத்தை ஏற்படுத்தும்.
மேலும் இவை தாவரங்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களையும் சேதப்படுத்தும். ஆனால் பூமிக்கு கவசமாக இருக்கும் இந்த ஓசோன் படலம் தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்வீச்சை உறிஞ்சிக்கொள்கிறது.
இத்தகைய படலத்தை அழிவில் இருந்து பாதுகாப்பதற்கும், ஓசோன் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவதற்காகவும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 16ம் தேதி ‘சர்வதேச ஓசோன் பாதுகாப்பு தினம்’ அனுசரிக்கப்பட்டது வருகிறது.
இந்த தினம் ஐ.நாவினால் உருவாக்கப்பட்டது.
ஓசோன் படலத்தை பாதுகாப்பதற்காகவும், ஓசோன் துளையை சரிசெய்வதற்காகவும், ஐ.நா 1987ம் ஆண்டு செப்.16ம் தேதி ஓசோன் அடுக்கைக் பாதிக்கும் பொருட்களின் மான்ட்ரியல் நெறிமுறை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. மேலும் உலக ஓசோன் பாதுகாப்பு தினத்தின் நினைவாக, ஓசோன் அடுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய பொறுப்புள்ள நபர்களாக நாம் இருக்க வேண்டும் என்பதை ஐ.நா வலியுறுத்தி வருகிறது.
குளோரோ புளூரோ கார்பனின் பயன்பாட்டை குறைக்க முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது குறிக்கோளாக இருந்தது.
*இந்த சர்வதேச தினத்தில், ஓசோன் படலத்தைப் பாதுகாப்பதற்கான சிறந்த 5 வழிகளை நாம் அறிந்து கொள்வோம்:*
1. மாண்ட்ரீயல் நெறிமுறையின் கீழ் நுகர்வுக்கு தகுதியற்றதாகக் கருதப்படும் ஓசோன் அடுக்கை சேதப்படுத்தும் பொருட்களின் (ODS) பயன்பாட்டை நாம் குறைத்துக்கொள்ள வேண்டும். அதாவது, CFC - குளோரோஃப்ளூரோகார்பன்கள், ஹைட்ரோகுளோஃப்ளூரோகார்பன்கள் (HCFC கள்), ஹலோஜனேட்டட் ஹைட்ரோகார்பன்கள், மீதில் புரோமைடு மற்றும் நைட்ரஸ் ஆக்சைடு போன்ற வாயுக்கள் ஓசோன் படலத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளன. எனவே இந்த வாயுக்கள் அடங்கிய பொருட்களைத் தேர்ந்தெடுப்பதைத் நாம் தவிர்க்க வேண்டும். சில அழகுசாதனப் பொருட்கள், ஹேர் ஸ்ப்ரேக்கள், ரூம் ஃப்ரெஷ்னர்கள், ரசாயன உரங்கள், ரசாயனம் கலந்த துப்புரவு பொருட்கள் ஆகியவை தீங்கு விளைவிக்கும் கிரீன்ஹவுஸ் வாயுக்கள் மற்றும் சிஎஃப்சிகளைக் கொண்டிருக்கலாம். அவற்றை அதிகம் பயன்படுத்துவதை நாம் குறைந்துக் கொள்வது நல்லது.
2. மின் சாதனங்களின் ஆய்வு மற்றும் பராமரிப்பு போன்றவை மிக அவசியம். மேலும் அவை ஓசோன் படத்தை பாதிக்கும் ODS வாயுக்களை வெளியிடும் என்பதால் அவற்றை அடிக்கடி பழுது பார்க்க வேண்டியது அவசியம். மின்சாதனகளை வீங்கி 10 - 15 வருடங்கள் முடிந்திருந்தால் அவற்றை அப்புறப்படுத்த வேண்டும். அவை உண்மையில் தீங்கு விளைவிக்கும் வாயுக்களை வெளியிடுகின்றன.
3. உங்கள் மின் சாதனங்களை அப்புறப்படுத்தும் போது மிகவும் கவனமாக இருங்கள். மேலும் ODS வாயுக்களை கொண்டிருக்கும் என்பதால் சாதனத்தின் குளிரூட்டும் சுற்றுக்கு சேதம் விளைவிக்காதீர்கள். குளிர்சாதனப்பெட்டிகள் மற்றும் குளிரூட்டிகளிலிருந்து ODS சரியாக மீட்கப்பட்டு மறுசுழற்சி செய்யப்பட வேண்டும். அது வளிமண்டலத்தில் வெளியிடப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எனவே, ஒரு தொழில்நுட்ப வல்லுநரால் அவை அகற்றப்படுவதை உறுதி செய்யவும்.
4. 'எனர்ஜி ஸ்டார்' லேபிள்களுடன் கூடிய சாதனங்களை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். மேலும், HCFC-களை குளிர்சாதனப் பொருட்களாகப் பயன்படுத்தாத ஏரோசல் பொருட்கள், ஏர் கண்டிஷனிங் மற்றும் குளிர்பதன உபகரணங்களை வாங்கவும். சுற்றுச்சூழல் நட்பு தயாரிப்புகளை வாங்க அனைவரையும் ஊக்குவிக்கவும்.
5. முடிந்தவரை பொதுப் போக்குவரத்து, சைக்கிள் ஓட்டுதல், நடைபயிற்சி, கார்களில் பயணம் செய்வதற்குப் பதிலாக கார் பூலிங் ஆகியவற்றைத் தேர்வு செய்து கொள்ளலாம். ஏனெனில் வாகனங்கள் வெளியிடும் வாயுக்கள் ஓசோன் படலத்தை பாதிப்பது மட்டுமல்லாமல், காலநிலை மாற்றத்திற்கு முக்கிய பங்கு வகிக்கின்றன.
இதுதவிர, ஓசோன் பாதிப்பை சரி செய்வதற்காக நாம் மரங்களை அதிக அளவு வளர்க்க வேண்டும். அதேபோல் வாகனங்களில் ஏற்படும் புகையை தவிர்க்க வேண்டும். குளோரோ புளூரோ கார்பனுக்கு பதிலாக ஹைட்ரோ புளூரோ கார்பன் அல்லது அமோனியா நீர் போன்றவற்றை பயன்படுத்தலாம். இன்றைய தினத்தில் நம் எதிர்கால சந்ததிகளை பாதுகாக்க ஓசோன் படலத்தை பாதிக்காத விஷயங்களில் ஈடுபடுவோம்.
Thursday, 15 September 2022
Monday, 12 September 2022
சமூக நலத்துறை - மனநலம், குழந்தைகள் மீதான வன்முறையைத் தடுத்தல், தன்னம்பிக்கையை வளர்த்தல், போதைப் பொருள்களுக்கு அடிமையாதலைத் தடுத்தல், தன் சுத்தம் பேணுதல் போன்ற பொருண்மைகளில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
அரசு உயர்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு மனநலம், குழந்தைகள் மீதான வன்முறையைத் தடுத்தல், தன்னம்பிக்கையை வளர்த்தல், போதைப் பொருள்களுக்கு அடிமையாதலைத் தடுத்தல், தன் சுத்தம் பேணுதல் போன்ற பொருண்மைகளில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த சமூக பாதுகாப்புத் துறை வழிகாட்டி நெறிமுறையை வடிமைத்துள்ளது. இவ்விழிப்புணர்வில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக பணியாளர்கள், குழந்தை நலக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள், இளைஞர் நீதி குழுமம் உறுப்பினர்கள், சைல்டு லைன் பணியாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களை இணைத்து விழிப்புணர்வு வழங்கவும், மேலும் இதுதொடர்பான எதிர்நோக்கு திட்டமிட்டு மாவட்ட ஆட்சியர் அவர்களின் ஒப்புதல் பெற்று வழங்க தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கூவ.குரும்ப பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில்
பொருள் சார்பாக சார்ந்த அலுவலர்கள் 12-09-2022 அன்று பள்ளிக்கு வருகை புரிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
Friday, 9 September 2022
தேசிய குடற்புழு நீக்க நாள் மாத்திரை வழங்குதல்
தேசிய குடற்புழு நீக்க நாள் 2022 2022 செப்டம்பர் 9 அனைத்து HSCS/ICDS மையங்கள் மூலமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
09.09.2022 தேசிய குடற்புழு நீக்க தினத்தின் நோக்கம்,
1 முதல் 19 வயதுக்குட்பட்ட அனைத்து பாலர் மற்றும் பள்ளி வயது குழந்தைகளுக்கும் (சேர்க்கப்பட்ட மற்றும் சேர்க்கப்படாத) பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் மூலம் அவர்களின் ஊட்டச்சத்து நிலை, கல்விக்கான அணுகல் மற்றும் வாழ்க்கைத் தரம் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக குடற்புழு நீக்கம் செய்வதாகும். ,
தற்போது, நிபுணர்களின் பல்வேறு பரிந்துரைகளின் அடிப்படையில், கோவிட்-19க்கு பயனுள்ள பதிலை உறுதி செய்யும் அதே வேளையில், மக்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும், குடற்புழு நீக்க முயற்சிகளின் தொடர்ச்சியைப் பராமரிக்கவும் NDD திட்டத்தைத் தொடர வேண்டும என்பதன் அடிப்படையில் இன்று 09-09-2022 கூவ.குரும்பபட்டி அரசு உயர்நிலைப் பள்ளி மாணவ மாணவியருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் மூத்த பட்டதாரி ஆசிரியர் திரு .வி. பீட்டர் சார்லஸ் உள்ளிட்ட ஆசிரிய பெருமக்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர் திருமதி. ஆரோக்கிய மேரி ஆகியோர் கலந்து கொண்டனர்
Subscribe to:
Posts (Atom)
-
கணித புதிர் 3க்கு சரியாக பதில் அளித்தவர்கள் ... 1.கோ.காளீஸ்வரி 10ம் வகுப்பு 2.அழகர் சாமி 8ம் வகுப்பு ...
-
நமது பள்ளியின் கியூ ஆர் கோட் . நமது பள்ளியின் கியூ ஆர் கோட் ஐ ஸ்கேன் செய்து ,பள்ளி நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளவும்.
-
ஆறாம் வகுப்பு கணித பாடத்தின் கியூ ஆர் கோட் வீடியோஸ் . உலகில் பல பேசும் மொழிகள் இருந்தாலும்,உலகின் ஒரே பொது மொழி கணிதமாகும். கணிதமானது ...