Thursday, 28 June 2018

கணித மன்றம் _ TANGRAM - 27-06-2018(புதிர்வெட்டுக் கட்டம்)


புதிர்வெட்டுக் கட்டம்



Like most modern sets, this wooden tangram is stored in the square configuration.
டான்கிராம் (Tangram) என்பது கணிதத்துடன் தொடர்புடைய ஏழு வேவேறு வடிவத் துண்டுகளைக் கொண்ட ஒரு புதிர் பலகை ஆகும். இது தற்போது புதிர் பலகை எளிய வடிவில் ஐந்து துண்டுகளையும் கொண்டுள்ளது. இது பொழுதுபோக்கிற்காக மட்டுமல்லாமல் சிந்தனையை தூண்டக் கூடிய விளையாட்டாகவும் விளங்குகிறது. இந்தப் பலகையில் உள்ள ஏழு அல்லது ஐந்து வடிவங்களை வெவ்வேறு முறையில் பொருத்தி பல்வேறு உருவங்களை உருவாக்க முடியும்.

    வரலாறு

    இந்த விளையாட்டு சீனர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இது சாங் வம்ச ஆட்சியின்போது தான் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இவ்விளையாட்டு சீனாவிலிருந்து கடல் வணிகம் மூலம் கப்பல் வழியே ஐரோப்பாவிற்கு பரவியது. அதன்பின்னர் முதலாம் உலகப்போர் நிகழ்ந்த காலகட்டத்தில் இந்த விளையாட்டு ஐரோப்பாவின் மிகச் சிறந்த புதிர் விளையாட்டாக மாறியது.

    நீண்ட காலமாக சீனாவில் விளையாடப்பட்டு வந்த விளையாட்டான டான்கிராமை அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு அறிமுகப் படுத்தியவர் கப்பல் மாலுமியும் கடல் வணிகருமான எம்.டொனால்ட்சன் என்பவர் தான். டான்கிராம் பற்றிய புத்தகத்தையும் இவர் வெளியிட்டார்.
    1891-ஆம் ஆண்டு காலகட்டத்தில் ஃப்ரெடெரிக் அடால்ஃப் ரிக்டர் என்பவர் ஜெர்மன் நாட்டில் முதன் முறையாக டான்கிராமை அறிமுகப் படுத்தினார்.

    டான்கிராம் என்ற வார்தையின் வேர்ச்சொல் என்னவென்று தெளிவாக தெரியவில்லை. Gram என்றால் கிரேக்கத்தில் கடிதம் என்று பொருள்படும்படியாக உள்ளது. ஆனால் tan என்பதற்கு நீட்டிக்க அல்லது தொடர என்றும் பல்வேறு பொருள் படும் என்று அனுமானிக்கப்படுகிறது.

    விதிமுறைகள்

    ஏழு துண்டுகள் இருந்தால் ஏழையும் பயன்படுத்த வேண்டும். ஐந்து துண்டுகள் இருந்தால் ஐந்தையும் பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு துண்டுகளின் பக்கங்களும் அடுத்த துண்டின் பக்கத்தை தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் ஒன்றின் மேல் ஒன்று இருக்கக் கூடாது

    மாணவர்கள் அமைத்த வடிவங்கள் 

    கணித மன்ற மாணவியர்கள் அமைத்த பூனை உருவம் 
     மாணவியர்கள் அமைத்த அன்னப் பறவை  உருவம் 


    Wednesday, 27 June 2018

    2017-2018 பொதுத் தேர்வில் எ.நாகராஜ் 500க்கு 400 பெற்று முதல் மாணவனாக சாதனை படைத்து இருக்கிறார்.




    2017-2018 ம் ஆண்டு பொதுத்  தேர்வில், நமது பள்ளி மாணவர் அ .நாகராஜ் ,400/500 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்று சாதனை படைத்து இருக்கிறார்.


    அவருக்கு நமது பள்ளி தலைமை ஆசிரியர்,ஆசிரியர்கள் ,மாணவர்கள்,முன்னாள் மாணவர்கள் மற்றும் ஊர் மக்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்
    .



    Monday, 25 June 2018

    புதிதாய் சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு கோப்பு மற்றும் புதிய புத்தகத்தின் பாட குறிப்புகள் வழங்கப்பட்டன..

    தலைமை ஆசிரியை  திருமதி அமுதா அவர்கள் வழங்கிய போது .
    கணித பட்ட தாரி  ஆசிரியர் திரு பீட்டர் சார்லஸ் ,வழங்கிய போது .
    அறிவியல் ஆசிரியர் திரு செல்ல பாண்டி அவர்கள் வழங்கிய போது .
    திரு அலெக்சாண்டர் அவர்கள் வழங்கிய போது .
    திரு அருள் ராஜ் அவர்கள் வழங்கிய போது .
    திருமதி இஸ்மாயில் பீவி அவர்கள் வழங்கிய போது.

    Thursday, 21 June 2018

    கணித மன்றம் (தமிழ் எண்கள்) 20-06-2018

    இருந்து 
    கணித மன்றத்தின் பொறுப்பாளர் திரு .தங்க ராஜ் அவர்கள் ,தமிழ் எண்களில்  இருந்து கணித எண்கள் தோன்றிய விதத்தை எடுத்து கூறினார். 

    சர்வதேச யோகா தினம்

    திரு செல்ல பாண்டி (அறிவியல் ஆசிரியர்)அவர்கள் யோகாசனத்தின் நன்மைகள் பற்றி மாணவர்களுக்கு போதித்தார் .

    மாணவர்கள் அனைவரும் யோகாவின் நன்மைகளை புரிந்து கொண்டு ,ஆசனங்களை செய்தனர்.

    இந்நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை திருமதி அமுதா ,தலைமை தாங்கினார்.
    பள்ளியின் பிற ஆசிரியர்கள் ,நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர்.

    YOGA VIDEO